வணக்கம் தமிழ் கூறும் உலகமே!!
எத்தனை முறை Hello World எழுதி முடித்த பின், முதன் முறையாக தமிழில் ஒரு தட்டெழுத்து.
எலி என்னவானால் என்ன? எல்லோருக்கும் முடிவை நோக்கிதான் கவலை. ஒரு எலி போனால் இன்னுமொரு எலி, இந்த பதிவு சரியாக வரவிட்டால் இன்னுமொரு முயற்சி.
எனக்கு தெரிந்தவர் ஒருவர். ஆராய்ச்சிக்காக நூற்றி சொச்ச எலிகள் வாங்கினார். இரவு பகலாக ஏதோ செய்தார். சில நாட்களில் கவலையாக தென்பட்டார். எலி எக்குதப்பாக ஏதோ செய்துவிட்டது போலும். இடையில் அவருக்கும் ஆராய்ச்சி தலைவருக்கும் ஏதோ பிரச்சனை. ஆராய்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார். எலியை நொந்துகொண்டிருந்தார். என்னவானார் என்று தெரியவில்லை.
ஆராய்ச்சி தலைவருக்கு அவர் ஒரு எலி. நிதி வழங்கிய நிறுவனத்திற்கு ஆராய்ச்சி தலைவர் ஒரு எலி.
மொத்தத்தில் நாங்கள் எல்லோருமே சோதனை எலி பட்டாளம்தான்.
e martë, 22 maj 2007
Abonohu te:
Posto komente (Atom)
Nuk ka komente:
Posto një koment