e mërkurë, 23 maj 2007

சும்மா இருப்பதே சுகம்

நீங்க என்ன செய்கிறீர்கள்?

சும்மா இருக்கிறேன்.

அப்படியொரு வேலையா? கேள்விபடவேயில்லையே!!

இது திரைப்படத்தில் வந்த ஒரு நகைச்சுவை. யோசித்து பார்த்தால், சும்மா இருப்பது லேசான வேலை மாதிரி தெரியவில்லை.

எனக்கு ஆங்கிலம் படிப்பித்த ஆசிரியை வகுப்பில் வந்து சும்மா இருந்ததாகவே நினைவு. மூன்று நான்கு வருடங்கள் இப்படி நடந்தது. எங்களுக்கு ஆங்கில வகுப்பு ஒரு தண்டணை மாதிரிதான் தெரிந்தது.
ஆசிரியைக்கு ஆயுள் தண்டணை மாதிரி இருந்திருக்கும்.

ஊரில் பல பேர் ஒரு வேலையும் செய்யவில்லை. வீதியோரத்தில் கூடி இருந்து அலசி ஆராய்ந்தார்கள். நாட்டு நிலைமை தெருவில் கூடுவதற்கு உசிதம் இல்லை என்கிற வரைக்கும், தெருவில் சும்மா இருந்தார்கள். அதன் பிறகு, வீட்டுக்குள் சும்மா இருந்தார்கள்.

இவர்களுக்கு குடும்பம், பிள்ளைகள் எல்லாம் இருந்தன. எப்படி குடும்பம் ஓடியது? சரியான புதிராக இருக்குது. அரசாங்கத்தின் இலவச திட்டங்கள் கை கொடுத்திருக்கும்.

புலம் பெயர்ந்த நாடுகளிலும் பகல் முழுக்க ரம்மி அடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அரசாங்கம் காசு கொடுக்கிறது. ரம்மி அடிக்க காசு கொடுக்கிறார்கள்.

Nuk ka komente: